தென்காசி வங்கி ஊழியரின் 5 வயது மகன் படுகொலை
Subscribe to Oneindia Tamil
தென்காசி: செண்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிட்டிபாபு. இவர் தென்காசியில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கணேசன். இவனுக்கு லேசாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து சிறுவன் கணேசனை காணவில்லை. பெற்றோர் அவனை பல இடங்களில் தேடினர். இதுகுறித்து போலீசிலும் புகார் செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில் கழிவு நீர் ஓடையில் சிறுவன் கணேசன் பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். கணேசனின் தலையில் காயங்கள் இருந்தன.
அவன் மீது கற்கள் நிரப்பிய சாக்கு மூட்டை கிடந்தது. மர்ம நபர்கள் கணேசனை கல்லால் தாக்கி கொலை செய்து ஓடையில் வீசியிருக்கலாம் என்றும், வெளியில் தெரியாமல் இருக்க சாக்குமூட்டையை உடல் மேல் வைத்திருக்க வேண்டும் எனவும் போலீசார் கருதுகின்றனர்.
நரபலி கொடுப்பதற்காக சிறுவனை யாராவது கடத்தி கொலை செய்தார்களா, என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications