மேற்கு வங்க ரயில் விபத்தில் சந்தேகம் இருக்கிறது-மமதா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சைந்தியா ரயில் நிலையத்தில், உத்தரபங்கா எக்ஸ்பிரஸும், வனாஞ்சல் எக்ஸ்பிரஸும் மோதிக் கொண்ட விபத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து நான் சிலவற்றை சந்தேகப்படுகிறேன். சில சந்தேகங்கள் எங்களுக்கு வந்துள்ளன. இருப்பினும் நடந்தது சாதாரண சம்பவம் அல்ல. இந்த விபத்துக்கான காரணத்தை அறிய தீவிரமாக முயற்சிப்போம்.
இதுகுறித்து விசாரணைக்கு விடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.
படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000மும் அளிக்கப்படும் என்றார் மமதா.
2 மாதத்தில் 2வது கோர விபத்து
கடந்த மாதம்தான் ஜார்காம் அருகே மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 148 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மேலும் ஒரு கோர விபத்து நடந்து 60 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications