மதுரையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள போலி டீ தூள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை : மதுரையில் ரூ. ஒரு கோடி மதிப்புள்ள போலி டீ தூளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை-யில் போலி டீத்தூள் தயார் செய்யப்பட்டு அவற்றை டீ கடைகளுக்கும், வெளியூர்களுக்கும் ஒரு சிலர் சப்ளை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமானுஜம் மற்றும் குமார் என்பவர்களுக்கு சொந்தமான குடோனில் போலி டீ தூள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் பொன்மேனி பகுதியில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள போலி டீத்தூள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த தூளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆனால், போலி டீத்தூள் தயார் செய்த ராமானுஜம் மற்றும் குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.












Click it and Unblock the Notifications