வாக்குமூலங்களின் மொழிபெயர்ப்பு-ஜெ.மனு மீது இன்று விசாரணை
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில், அரசுத் தரப்பில் தாக்கல் செய்துள்ள சாட்சியங்களின் வாக்குமூலங்களின், தமிழ் மொழிப் பெயர்ப்பு சரியாக இல்லை. மீண்டும் இதை சரிபார்த்து, தமிழிலுள்ள வாக்கு மூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நீதிபதியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர், மறு விசாரணையை துவக்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு இன்று பெங்களூர் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்த வழக்கில், சாட்சியங்கள் மறு விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையை நாளை முதல் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், தமிழில் கொடுத்த சாட்சியம் வாக்குமூலம் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த தமிழ் மொழிப் பெயர்ப்பு சரியான முறையில் உண்மையானதாக இல்லை. எனவே, மீண்டும் இதை சரிபார்த்து, தமிழிலுள்ள வாக்கு மூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நீதிபதியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர், மறு விசாரணையை துவக்க வேண்டும் என, ஜெயலலிதா தரப்பில் தனி நீதிமன்றத்தில் கடந்த 14 ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.