கலைக் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் செம்மொழி தமிழ்ப் பாடத் திட்டம்

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துக் கூறுகையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி அறிவித்தப்படி, கலைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டாம் பருவத்தில், உரைநடைப் பாடத்தில் செம்மொழி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பாடத்திட்டத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பில் தமிழ் பேராசிரியர்கள் உருவாக்குவார்கள்.
கலை அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தில், தமிழ்ச் செய்யுள், உரைநடை, இலக்கிய பாடங்களும், இரண்டாம் பருவத்தில் இலக்கிய வரலாறு, செம்மொழி வரலாறு பாடங்களும் இடம்பெறும்.
தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்காக அடுத்த கல்வி ஆண்டு முதல் செம்மொழி வரலாறு மற்றும் பண்புகள் குறித்த பாடத்திட்டத்தை உருவாக்குவது பற்றி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான பேராசிரியர் குழு முடிவு செய்யும்.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செம்மொழி பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும்.
அதேபோல பிசிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் செம்மொழிப் பாடத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications