எனது பொறுப்புகளை யாராவது ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்-ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங் தொடர்ந்து ப.சிதம்பரத்தை விமர்சித்தபடி உள்ளார். நக்சலைட் பிரச்சினையில் ப.சிதம்பரத்தின் அணுகுமுறையை அவர் சாடி வருகிறார்.
சமீபத்தில் மீண்டும் திக்விஜய் சிங், ப.சிதம்பரத்தை விமர்சித்துப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
அவர் கூறுகையில், திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர். எனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அதை நான் செய்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு திறமையாகவே செயல்படுவதாக கருதுகிறேன். ஒரு வேளை என்னை விடசிறப்பாக செய்ய முடியும் என யாராவது நினைத்தால் தாராளமாக அவர்கள் எனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளலாம். நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications