பாளையங்கோட்டை சிறைக்குள் செல்போன் தகராறு: 3 பேர் மீது வழக்கு
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் செல்போன் கேட்டு தண்டனை கைதியின் முதுகில் கம்பியால் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர் காலனியை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். இவரிடம் செல்போன் இருப்பதாக அதே பிளாக்கில் உள்ள சில கைதிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஆம்பூரை சேர்ந்த மூக்காண்டி, பாளையங்கோட்டை புதுபேட்டை தெருவை சேர்ந்த சிவா, கரையிருப்பை சேர்ந்த தங்க கணபதி ஆகிய 3 கைதிகளும் அவரிடம் செல்போன் கேட்டு நச்சரித்துள்ளனர்.
தன்னிடம் செல்போன் எதுவும் இல்லை என ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த 3 கைதிகளும் ஜான் பிரிட்டோவின் முதுகில் கம்பியால் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கம்பியால் கைதியை தாக்கிய 3 பேர் மீதும் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications