கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: குமரி மேற்கு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு கடந்த வாரத்தில் மட்டும் 2 பெண்கள் பலியாகினர்.

குலசேகரம் உண்ணியார் கோணத்தை சேர்ந்தவர் வர்க்கீஸ். நேற்று முன்தினம் இவரின் ஒன்பது வயது மகன் ஜேசன் டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிர் இழந்தான்.

நேற்று கன்னியாகுமரியை சேர்ந்த 2 வயது குழந்தை ஒன்றும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது.

கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவை சேர்ந்த பிரேமன்-பிரியா தம்பதிக்கு 2 வயதில் ரியா என்ற பெண் குழந்தை இருந்தது.

கடந்த வாரம் இக்குழந்தைக்கு காய்ச்சல் வந்ததையடுத்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக குழந்தையை திருவனந்தபுரம் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு கொண்டு சென்ற சில மணி நேரத்திலேயே குழந்தை ரியா பரிதாபமாக இறந்ததாள்.

குழந்தையின் பிரிவால், அதன் பெற்றோர் மட்டுமின்றி அந்த பகுதி மக்களும் துயரத்தில் உள்ளனர். இந்த பகுதியில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர். மேலும், மாவட்ட சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+