பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம்- சுனாமி பீதி
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்சில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பீதி ஏற்பட்டது.
இன்று காலை 6.08 மணியளவில் இந்த கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மின்டானோ, கொடபாடோ ஆகிய தென் பிலிப்பைன்ஸ் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் பரவியது.
இதனால் மக்கள் கடலோரப் பகுதிகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. சுனாமி அலைகளும் ஏற்படவில்லை.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 புளளிகளாகப் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications