ரூபாய் நோட்டு குறியீட்டை வடிவமைத்த உதயகுமாருக்கு கருணாநிதி வாழ்த்து
இந்திய ரூபாய் நோட்டுக்கான குறியீட்டை வடிவமைக்கும் போட்டியில் சென்னையை சேர்ந்த உதயகுமார் வெற்றி பெற்றார். இவர் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.யில் உதவி பேராசியராக பணி புரிந்து வருகிறார். நாடு முழுவதிலும் இருந்து பலரும் கலந்து கொண்ட போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர் வெற்றியடைந்துள்ளதால் தமிழக மக்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்துள்ளனர்.
இதையடுத்து உதயகுமார் நேற்று தன் குடும்பத்தினருடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த உதயகுமாருக்கு முதலமைச்சர் தன் பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் உருவாக்கிய குறியீட்டை இந்திய ரூபாய்க்கான குறியீடாக மத்திய அரசு தேர்ந்தெடுத்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை என்னுடைய குடும்பத்தினரோடு சந்தித்து வாழ்த்து பெற்றேன். இந் நாள் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது ஒரு பொன்னாள்.
முதல்வரின் பாராட்டை பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. முதல் கருணாநிதிக்கு இந்த குறியீடு குறித்த ஒரு புத்தகம் ஒன்றை வழங்கி உள்ளேன். இனி என்னுடைய ஆசிரியர் பணியில் முழு கவனம் செலுத்தப் போகிறேன் என்றார்.