தாயார் அஞ்சுகத்தம்மாள் சமாதியில் முதல்வர் கருணாநிதி அஞ்சலி
திருவாரூர்: திருவாரூர் வந்த முதல்வர் கருணாநிதி, தனது தாயார் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தலமைச்சர் கருணாநிதி திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை 7.30 மணிக்கு திருவாரூர் வந்தார். திருவாரூர் ரயில் நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கருணாநிதி அங்கிருந்து கார் மூலம் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் திருவாரூருக்கு அருகே உள்ள தாட்டூர் கிராமத்தில் அமைந்திருக்கும் தனது தாயார் அஞ்சுகத்தம்மாளின் சமாதிக்கு சென்றார்.
சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கினார். சிறிது நேரம் அங்கே இருந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.
சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்ற முதல்வர் அங்குள்ள அண்ணா சமாதியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்து பழைய நினைவுகளில் மூழ்கினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications