For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன் விபத்தில் இலங்கைத் தமிழர் மரணம்

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் நடைபெற்ற சாலை விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

லண்டனில் வசிப்பவர் இராஜேந்திரன் இராமகிருஷ்ணன் (35). இவர், மிதிவண்டியில் பத்திரிகை விநியோகம் செய்து வருகின்றார். அதிகாலை நேரத்தில் பத்திரிகை விநியோகம் கொண்டிருந்த போது வாகனம் ஒன்று அவர் மீது எதிராபாரமல் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதனால் மரணத்தை தழுவினார்.

இந்த விபத்தில் உயிரிழந்த இராமகிருஷ்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இலங்கையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X