எதிர்கட்சிகள் அமளி: மக்களவை-மாநிலங்களவை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி பாஜக, இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.
இதையடுத்து மக்களவையும் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இன்று காலை அவை தொடங்கியதும் விலைவாசி உயர்வு குறித்து உடனே விவாதிக்க வேண்டும், இதற்காக ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரின.
இதை மத்திய அரசு ஏற்க மறுத்ததால் எதிர்க் கட்சிகளின் அமளி துவங்கியது. இதையடுத்து மக்களவை, மாநிலங்களவை இரண்டும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications