ராதாபுரம் பஸ் நிலைய பிச்சனையில் கைதான 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிக்கை
நெல்லை: ராதாபுரம் பஸ் நிலைய பிச்சனையில் கைதான சிவாஜி முத்துகுமார் உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டுமேன்று கலெக்டரிடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக கலெக்டர் ஜெயராமனிடம் ராதாபுரம் தியாகி சுடலைமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்டி அரசு அறிவித்தது. அரசு உத்தரவை செயல்படுத்தும் வகையில் பஸ் நிலையத்தில் காமராஜர் பஸ் நிலையம் என்று பெயர் வைக்க உத்தரவிட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. முதல்வர் உத்தரவால் சென்னையில் போலீசார் தொடர்ந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு நாங்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளோம்.
ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரி நான் உண்ணாவிரதம் இருந்த போது ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய சிவாஜி முத்துகுமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது வள்ளியூர் போலீசார் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் மனுவி்ல் கூறியுள்ளார்.