For Daily Alerts
Just In
சென்னையில் 55,000 புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட்!
சென்னை: சென்னையில் புதிதாக 55,000 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இப்போது 50,000 ஆட்டோக்கள் இயங்குகின்றன.
இந் நிலையில் புதிய ஆட்டோக்களுக்கு அரசு அனுமதி அளித்து வருகிறது. யார் விரும்பினாலும் ஆட்டோ பெர்மிட் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு, பெர்மிட் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
இதுவரை மொத்தம் புதிதாக 55,000 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. வட சென்னை வட்டார இணை போக்குவரத்து அலுவலகத்தில் மட்டும் நேற்று வரை 28,604 ஆட்டோக்களுக்கு ஆட்டோ பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1,187 ஆட்டோக்கள் ஓடத் தொடங்கி விட்டன.
தென் சென்னை பகுதியில் 26,000 ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதில் 1,100 ஆட்டோக்கள் ஓடத் தொடங்கி விட்டன.
Comments
Story first published: Wednesday, July 28, 2010, 14:07 [IST]