For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவர் கடத்தல்-மீட்டு தர கோரி இளம்பெண் போராட்டம்

Google Oneindia Tamil News

களியாக்கவிளை கடத்தப்பட்ட கணவரை மீட்டுத் தரக் கோரி பெண் போராட்டத்தில் குதித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்கவிளை அடுத்து எள்ளுவிளையை சேர்ந்தவர் சந்தியா. சென்னையில் வேலை பார்த்தபோது செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் செல்வத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சந்தியாவை விட்டு விட்டு அந்த பெண்ணுடன் குழந்தைகளை அழைத்து சென்று விட்டார். சொந்த ஊருக்கு வந்த சந்தியாவுக்கு அங்கு மாளிகை கடை நடத்தி வந்த அசோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சென்னைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அசோகனின் பெற்றோர் சந்தியாவை மருமகளாக ஏற்று கொள்வதாக கூறி இருவரையும் ஊருக்கு அழைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சந்தியாவும், அசோகனும் ஊருக்கு வந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அசோகனை குண்டுகட்டாக தூக்கி காரி்ல் கடத்தி சென்று விட்டனர். இதையடுத்து காதல் கணவனை மீட்டு தர கோரி அசோகன் வீட்டு முன்பு அமர்ந்து சந்தியா போராட்டம் நடத்தினார். தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார்.

மார்த்தாண்டம் மகளிர் போலீசார் வந்து சந்தியாவிடம் விசாரணை நடத்தினர். அசோகன் எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X