சிறை வளாகத்திற்குள் வாக்கிங் போக அனுமதி கோரி சீமான் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறை வளாகத்திற்குள் நடை பயிற்சி மேற்கொள்ளக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான்.

இதுதொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

சிறையில் விதிமுறைகளை மீறி என்னை தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் முதல் வகுப்பு வசதி செய்யாமல் சாதாரண வகுப்பில் வைத்துள்ளனர். தனிமை சிறையை நீக்கி முதல்வகுப்பு தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் ஆகியோர் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதாடினார்.

அவர் கூறுகையில், தனிமை சிறையில் சீமானை அடைக்கவில்லை. அவருக்கு முதல் வகுப்பு வசதிகள் தரப்பட்டுள்ளதாக கூறினார்.

இதற்கு சீமான் தரப்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் பதில் மனுதாக்கல் செய்தார். அதில், சீமானுக்கு பக்கத்து அறையில் 15 கைதிகளை அடைத்து வைத்து விட்டு இவரை 50 பேர் அடைக்க கூடிய அறையில் தனியாக வைத்துள்ளனர்.

காலை, மாலை நேரங்களில் வாக்கிங் செல்லக்கூட இவருக்கு மட்டும் அனுமதி தருவதில்லை. வாக்கிங் செல்ல அவருக்கு அனுமதி தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சிறைசூழலை பற்றி சீமான் எழுத்து பூர்வமாகவும், அரசு தரப்பில் பதில் மனுவாகவும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+