பாகிஸ்தான் விமானம் இஸ்லாமாபாத் அருகே மலையில் மோதி 152 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

ஏர் ப்ளூ ஏர்லைன் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் துருக்கியிலிருந்து கராச்சி வழியாக இஸ்லாமாபாத் வந்தது.
தரைப் பகுதியே தெரியாத அளவுக்கு கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் இஸ்லாபாத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் மர்கல்லா என்ற மலைப் பகுதியில் வந்தபோது அந்த விமானம் மலையில் மோதி வெடித்துச் சிதறியது.
அதிலிருந்த பயணிகள், விமானிகள், சிபந்திகள் உள்ளிட்ட 152 பேரும் பலியாகி விட்டதாகத் தெரிகிறது.
மோசமான வானிலையே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications