மிகவும் நடுநிலையுடன் பணிபுரிந்தேன்-நரேஷ் குப்தா
சென்னை: தமிழக தேர்தல் அதிகாரியாக நடுநிலையுடன் பணிபுரிந்தேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது என்று நரேஷ் குப்தா கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து நாளை ஓய்வு பெறும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன் நைஜீரியா சென்று வந்தேன். அங்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அவர்களுக்கு இந்திய தேர்தல் முறை பற்றி விளக்கம் அளித்துள்ளேன்.
பல்வேறு அரசுத் துறைகளில் 37 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். 8 வருடங்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தேன். பொதுத் தேர்தலும், இடைத் தேர்தல்களும் மிக சவாலானவை.
இதில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மிக மிக சவாலானதாக அமைந்தது. ஆனாலும் பொதுத் தேர்தலை விட இடைத் தேர்தல்களில் தான் நான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
என் பணிக் காலத்தில் நான் நடுநிலையாளனாக பணிபுரிந்தேன் என்ற திருப்தி இருக்கிறது.
பணத்துக்காக ஓட்டுப்போடும் பிரச்சனை குறித்து பலமுறை செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். பணம் கொடுப்பதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதற்கு நான் பதில் சொல்வதை விட புதிதாக வரும் தலைமை தேர்தல் அதிகாரி பதில் சொன்னால் சரியாக இருக்கும் என்றார்.
கேள்வி: உங்கள் அனுபவத்தை புத்தகமாக எழுதுவீர்களா?
பதில்: 37 ஆண்டுகள் அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு சிறிது ஓய்வு தேவை. நான் புத்தகம் எழுதினாலும் மற்றவர்கள் படிப்பார்களா?. என்றாலும் என் அனுபவங்களை மற்றவர்களிடம் நடைமுறையில் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
கேள்வி: நீங்கள் அரசியலில் ஈடுபடுவீர்களா?
பதில்: அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால், மிக முக்கியமான கட்டத்தில் நான் ஓய்வு பெறுகிறேன் என்றார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications