தலைமைத் தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் நியமனம்
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி நரேஷ் குமார் விடைபெறுகிறார். இதையடுத்து அவரது இடத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் குமார் நியமிக்கப்படவுள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவரான நரேஷ் குப்தா தற்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.
உ.பி மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் குப்தா, பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். திமுக ஆட்சிக்காலத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வரும் நரேஷ் குப்தா, கடந்த 1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தின்போதும் 2 ஆண்டுகள் இப்பதவியை வகித்தவர்.
மிகவும் எளிமையான, நேர்மையான அதிகாரி என்று அனைத்துத் தரப்பினராலும் (அரசியல்வாதிகளைத் தவிர) பாராட்டப்பட்ட நரேஷ் குப்தா ஜூலை 31ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அப்பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் குமார் நியமிக்கப்படுகிறார்.
நேற்று காலை பிரவீ்ன் குமார், நரேஷ் குப்தாவை சந்தித்துப் பேசினார். இன்று பிரவீ்ன் குமார் பதவியேற்பார் எனத் தெரிகிறது.
இவரும் நரேஷ் குப்தா போலவே நேர்மையானவர் என்று அரசுத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. பிரவீன் குமார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
1987-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். 1961-ம் ஆண்டில் பிறந்த அவர், கான்பூர் ஐ.ஐ.டி.யில் உலோகவியலில் பி.டெக், எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றபின், முதலில், 1988-ல் சேலத்தில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். 1989-ல் தஞ்சையில் சப்-கலெக்டராகவும், 1989-ல் செட்டில்மென்ட் அதிகாரியாகவும், 1991-ல் தஞ்சை கூடுதல் கலெக்டராகவும், 1996-97-ல் விழுப்புரம் கலெக்டராகவும் பணிபுரிந்தார்.
1997-ல் தொழில்துறை கூடுதல் செயலாளராகவும், 2000-த்தில் நிதித்துறையில் கூடுதல் செயலாளராகவும் பணிபுரிந்தார் பிரவீன் குமார். பின்னர், 2001-ம் ஆண்டில் டெல்லியில் மத்திய அரசு பணிக்குச் சென்ற அவர் அங்கு கல்வித்துறை இயக்குனராகவும், கம்பெனி விவகாரத்துறையில் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
2001 முதல் 2007 வரை மத்திய அரசு பணியில் இருந்த அவர், தமிழகம் திரும்பி, நிதித்துறையில் சிறப்பு செயலாளராக இருந்தார். தற்போது, நிதித்துறையில் செயலாளராக (செலவினம்) இருந்து வருகிறார்.
இவரது மனைவி அனிதா பிரவீனும் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரிதான். பிரவீன் குமார் பணிபுரியும் நிதித்துறையிலேயே செயலாளராக (திட்டம் மற்றும் வளர்ச்சி) பணிபுரிந்து வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு பாட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications