அடுத்த 6 ஆண்டுகளுக்கு பம்பரச் சின்னமே நீடிக்கும்-வைகோ
கடந்த தேர்தல்களில் போதிய வாக்குகளைப் பெறாததால் தமிழகத்தில் மதிமுகவுக்கும், புதுச்சேரியில், பாமகவுக்கும் பிராந்தியக் கட்சி என்ற அந்தஸ்து பறிபோயுள்ளது.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டாலும் கூட அக்கட்சியின் தேர்தல் சின்னத்தை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணைய விதிமுறை தெளிவாக கூறியுள்ளது.
தேர்தல் சமயத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்ய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது. அது மதிமுகவுக்குப் பொருந்தும். இருப்பினும் 2016ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வரை பம்பரம் சின்னத்தை நாங்கள் பெற முடியும்.
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கட்சிகளுக்கு இந்த சின்னப் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் வழங்குகிறது. அடுத்த சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெறுவோம். மதிமுக இழந்த அங்கீகாரத்தை மீண்டும் பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.