ஜெ. பக்கம் மக்கள் சக்தி திரண்டு வருகிறது-குண்டு கல்யாணம்
மதுரை: மக்கள் சக்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பக்கம் திரண்டு வந்து கொண்டிருக்கிறது. வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார் நடிகரும், அதிமுக பேச்சாளருமான குண்டு கல்யாணம்.
மதுரை மாநகர் அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் 108-வது பிரச்சார பொதுக்கூட்டம் மதுரை ஓபுளா படித்துறையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு குண்டு கல்யாணம் பேசுகையில்,
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது. கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறிவித்த எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. அத்தனை திட்டங்களும் போலியானது என்று மக்கள் உணர்ந்துள்ளனர்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு இதுவரை திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. போராட்டம் நடத்தவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சொல்கிறார்கள். இதனை தமிழக மக்கள் வேடிக்கையாக பார்க்கிறார்கள்.
ஜெயலலிதா பக்கம் மக்கள் சக்தி திரண்டு விட்டது. இதற்கு கோவை கூட்டமே சாட்சி ஆகும். எனவே வருகிற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வருவார் என்றார் குண்டு கல்யாணம்.












Click it and Unblock the Notifications