முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக திகழ்கிறது தமிழகம்-ஸ்டாலின்
கோவை: முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் 19வது ஸ்டிகான் (சிறு மற்றும் குறு தொழில்துறை மாநில மாநாடு) மாநாட்டை தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில், தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ரூ. 46,091 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 37 பெரும் தொழில் நிறுவனங்கள் இந்த முதலீடுகளைச் செய்துள்ளன. 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
உள்ளூர் தொழில்சந்தையில் சிறு மற்றும் குறு தொழில்துறையின் பங்கு 45 சதவீதமாகும். இவற்றின் மூலம் இந்தியாவிலிருந்து 40 சதவீத அளவு ஏற்றுமதி நடக்கிறது என்றார் ஸ்டாலின்.
தமிழத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள மின் கட்டண உயர்வு குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், மின் கட்டண விகித மாற்றம் குறித்து குறு மற்றும் சிறு தொழில்துறையினர் தெரிவித்துள்ள கவலைகள் கருத்தில் கொள்ளப்படும்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழகத்தில் மின் கட்டண விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications