For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் டிஜி்ட்டல் போர்டால் பதற்றம்: போலீசார் சமரசம்

Google Oneindia Tamil News

திசையன்விளை: திசையன்விளை அருகே பஞ்சாயத்தை எதிர்த்து காங்கிரசார் வைத்துள்ள டிஜிட்டல் போர்டால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

திசையன்விளை அருகே உள்ளது நவ்வலடி பஞ்சாயத்து. இப்பஞ்சாயத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் அங்குள்ள மெயின் ரோட்டில் டிஜி்ட்டல் போர்ட் வைத்துள்ளனர். அதில் பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட 729 இலவச காஸ் இணைப்புகளுக்கு ரூ.100 வீதம் மொத்தம் 58 ஆயிரம் வசூல் செய்ததாகவு்ம், புதிய குடிநீர் இணைப்பை பொதுமக்களுக்கு வழங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும், மக்கள் நல பணியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து எழுத்தர் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்களை நியமிக்காமல் வெளியூர் நபர்களை நியமித்ததாகவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டிஜிட்டல் போர்டை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரியும் ஆண்களும், பெண்களும் சுமார் 100 பேர் நேற்று காலை நவ்வலடி மெயின் ரோட்டில் திரண்டனர்.

இதேபோல் டிஜிட்டல் போர்டை அகற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி இளைஞர் காங்கிரசாரும் அங்கு திரண்டனர். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. உவரி சப்-இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X