7000 புதிய பணியாளர்களை நியமிக்கும் கேப்ஜெமினி!

இந்திய ஐடி துறையில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி காரணமாகவே இந்த புதிய ஆளெடுப்பை அறிவித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம்தான் 10000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்தது கேப்ஜெமினி. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் சலீல் கூறியிருப்பதாவது:
"கேப்ஜெமினி இந்தியா இன்றைக்கு முக்கிய மனித வள ஆதார நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஐடி துறை வளர்ச்சி சீராகவும், மிகுந்த நம்பிக்கைக்குரியதாகவும் உள்ளது. இதனால்தான் அடுத்தடுத்த மாதங்களில் மொத்தம் 17,000 பேரை எடுத்துள்ளோம்" என்றார்.
கடந்த 18 மாதங்களில் மொத்தம் 40 புதிய வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய நிலவரப்படி கேப்ஜெமினியின் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிளைகளில் 26000 பேர் பணியில் உள்ளனர்.
இதுதவிர உலகம் முழுக்க 95000 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது கேப்ஜெமினி.












Click it and Unblock the Notifications