For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 8 பேர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நடந்த கோரமான சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் குதிரைக்கால்வாய் என்னும் இடத்தில் இன்று காலை 6.45 மணியளவில் கருங்கல் ஏற்றி வந்த ஒரு லாரியும், டாடா சுமோ காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்தக் கோர விபத்தில் டாடா சுமோவில் பயணித்த ஒரு குழந்தை, நான்கு பெண்கள், மூன்று ஆண்கள் ஆகிய எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்த 7 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் ஆவர். அங்கு முதலுதவிக்குப் பின்னர் அனைவரும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments
Story first published: Wednesday, August 4, 2010, 14:13 [IST]