சாதிவாரி கணக்கெடுப்பு-6ம் தேதியாவது முடிவெடுப்பார்களா?
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை பலமுறை கூடி விவாதித்தாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முற்பட்ட சாதியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் முடிவு எட்டப்படவில்லை.
ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிக இடஒதுக்கீடு தரவும், இருக்கும் இட ஒதுக்கீட்டை சட்டரீதியில் காப்பாற்றவும் அவர்களது எண்ணிக்கையை அறிய வேண்டியது அவசியமாகிறது. இதனால் சாதிரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று திமுக, பாமக, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, லாலு பிரசாத் யாதவி் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விஷயத்தில் அதிமுக அமைதி காக்கிறது. பாஜக இதை விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்த கணக்கெடுப்பை இடதுசாரிகள் ஆதரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையி்ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவு செய்ய வரும் 6ம் தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடக்கிறது. அதிலாவது முடிவு எடுக்கப்படுமா அல்லது மீண்டும் இழுத்தடிக்கப்படுமா என்று தெரியவில்லை.