196 ஏட்டுகள் எஸ்ஐக்களாக பதவி உயர்வு : விரைவில் நியமன உத்தரவு
புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் 196 ஏட்டுகள் இன்னும் சில தினங்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சில மாதங்களுக்கு முன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் அனைவரும் அந்தந்த காவல் நிலையங்களிலும், சிலர் அருகில் உள்ள மற்ற காவல் நிலையங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
அதன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 முதல் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 250க்கும் மேற்பட்ட ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்படுவதற்கு 25 ஆண்டுகள் போலீஸ் மற்றும் ஏட்டாக பணிபுரிந்திருப்பதுடன் எவ்வித குற்றச்சாட்டுக்கும ஆளாகாமல் இருக்க வேண்டும். தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள 68 காவல் நிலையங்களில் 170 ஏட்டுகளும், ஆயுதப்படையில் 26 ஏட்டுகளும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
அதன்படி இன்னும் ஒருவாரத்தில் அநேகமாக ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் அனைவருக்கும் பதவி உயர்வுக்கான உத்தரவு வழங்கப்பட உள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்களின் எண்ணிக்கையை விட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications