2 தமிழக லாரி டிரைவர்கள் கர்நாடகத்தில் படுகொலை: தோட்டா தயாரிக்க பயன்படும் தாமிரம் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: தமிழகத்தைச் இரு லாரி டிரைவர்கள் கர்நாடக மாநிலத்தில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டு அவர்களது லாரி மற்றும் அதிலிருந்த ரூ. 52 லட்சம் மதிப்புள்ள தாமிரத் தகடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்லைச் சேர்ந்த செல்வம் (45), லோகநாதன் (40) இருவரும் கடந்த 31ம் தேதி தூத்துக்குடியில் இருந்து ரூ. 52 லட்சம் மதிப்புள்ள தாமிரத் தகடுகளை ஏற்றிக் கொண்டு குஜராத் மாநிலம், சிம்ஹாசா பகுதிக்குச் சென்றனர்.

கடந்த 2ம் தேதி பெல்லாரி மாவட்டம் தேவசமுத்திரம் காட்டுப் பகுதியில் சென்றபோது லாரியை ஒரு கும்பல் வழி மறித்து டிரைவர்களை கைகளைக் கட்டி, லாரியை கடத்திச் சென்றுள்ளது.

காட்டுப் பகுதியில் வைத்து டிரைவர்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தாமிரத் தகடுகளுடன் லாரியை கடத்திச் சென்று விட்டனர்.

இந் நிலையில் காட்டுப் பகுதியில் கிடந்த இரு சடலங்களையம் 3ம் தேதி போலீஸார் மீட்டுள்ளனர்.

நக்ஸலைட்டுகள் கொன்றனரா?:

கடத்தப்பட்ட லாரியில் இருந்த தாமிரத் தகடுகள் துப்பாக்கித் தோட்டா தயாரிக்க பயன்படுத்தப்படுவை என்பதால் அதை நக்சலைட்டுகளோ அல்லது தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ கடத்தியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+