இலங்கை தமிழர் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு

இந் நிலையில் வன்னி பகுதியில் சீனாவை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்ததாக தகவல்கள் வருகின்றன. அவர்களுடன் ராஜபக்சேவின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
வன்னி பகுதி முழுவதையும் சுற்றிப் பார்த்த சீன அதிகாரிகள் அங்கு எந்தெந்த இடங்களில் சிங்களர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவது என்பது பற்றி ஆய்வு நடத்தியதாகத் தெரிறது.
மேலும் இந்தப் பகுதியில் சீன ராணுவ மற்றும் உளவு கட்டமைப்புகளும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.
ராஜபக்சேவின் கூட்டணியில் இணைந்த 2 தமிழ் எம்பிக்கள்:
இந் நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 2 தமிழ் எம்.பிக்கள் அதிபர் ராஜபக்சேவின் கட்சியில் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்பிக்களான திகாம்பரம், பிரபா கணேசன் இருவரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினர்.
இதையடுத்து இருவரும் ராஜபக்சேவின் கூட்டணியில் சேர்ந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு தான் தேர்தலில் வெற்றி பெற்றோம். எனினும், அந்த கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. அதனால் தான் ஆளும் கூட்டணியில் சேர்ந்துள்ளோம். இனி அதிபருடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்வோம் என்றனர்.
அமெரிக்கா ஆலோசனை கூற தகுதியில்லை-அமைச்சர்:
இதற்கிடையே ஆப்கானிலும் ஈரானிலும் 11 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இலங்கைக்கு ஆலோசனை கூற தகுதியில்லை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்தவரான அவர் நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications