For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் நிலவரம்-ஆக. 10ல் பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் கலவரம் தொடர்பாக ஆகஸ்ட் 10ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

காஷ்மீரில் தொடர்ந்து நிலவி வரும் வன்முறை, கலவரம், போராட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்பச் செய்ய அனைத்துக் கட்சியினரும் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் கேட்டுக் கொள்ளவுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தொடக்கம் முதலே காஷ்மீர் ரத்த பூமியாக மாறியுள்ளது. வன்முறை, துப்ப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X