புதுச்சேரி மருத்துவ கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த கோரி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளது.
புதுச்சேரி கதிர்காமத்தில் காமராஜர் அரசு மருத்துவக் கல்லூரி புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாண்டுகள் கடந்தும் மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை.
இதனைக் கண்டித்து, மருத்துவக் கல்லூரி எதிரே சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.
அதிமுக மாநிலச் செயலாளர் அ. அன்பழகன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். சிபிஐ மாநிலச் செயலாளர் நா .கலைநாதன், மதிமுக மாநில அமைப்பாளர் நா.மணிமாறன், பார்வர்டு பிளாக் கட்சிதலைவர் முத்து, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாநில செயலாளர் லெனின் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.












Click it and Unblock the Notifications