சுனந்தா என் வருங்கால மனைவி-சசி தரூர் ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு இருவரும் ஜோடியாக சென்றனர். ஜோடியாக பூஜை செய்தனர். இதையடுத்து இருவரும் விரைவில் கல்யாணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின, நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூட செய்திகள் கூறின.
இந்த நிலையில் மும்பையில் நடந்த 16வது லலித் தோஷி நினைவு உரையாற்றுவதற்காக தரூர் வந்திருந்தார். அவருடன் சுனந்தாவும் வந்திருந்தார்.
அப்போது சுனந்தாவை விழா அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தியபோது, தரூரை மணக்கவிருப்பவர் என்று கூறினர். இதை தரூரும் தலையாட்டி ஆமோதித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலதிபர்கள் ஆடி கோத்ரெஜ், கேசப் மகிந்திரா ஆகியோருடன் சுனந்தாவும் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.












Click it and Unblock the Notifications