எலிகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஐ.மு.கூ. அரசு-பிருந்தா பாய்ச்சல்
விஜயவாடா: மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எலிகளுக்குத் தவறாமல் உணவு கிடைத்து விடுகிறது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விளையாசியுள்ளார் சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்.
விஜயவாடாவில் நடந்த கட்சியின் விரிவுபடுத்தப்பட்ட மத்திய கமிட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் உணவு நிர்வாகம் மகா மோசமாக உள்ளது. எலிகளுக்குத்தான் இங்கு உணவுப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. உலகிலேயே பசியுடன் இருக்கும் மக்கள் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து முன்னணி இடத்தில் கொண்டு போய் நிறுத்தியிருப்பது மிகப் பெரிய அவலம்.
இந்திய உணவுக் கழக கிட்டங்களில் 6 கோடி டன் உணவு தானியங்கள் வீணாகிக் கிடக்கின்றன. அங்கெல்லாம் எலிகள்தான் சாப்பிட்டு சந்தோஷமாக உள்ளன. ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்கான அந்தப் பொருட்கள் எல்லாம் எலிகளுக்கே போய்க் கொண்டிருக்கிறது.
மக்கள் நலன் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவலைப்படுவதே இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications