For Daily Alerts
Just In
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு முழுமையாக தளர்வு
இன்று காலை முதல் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கை தளர்த்தினர். இதையடுத்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி வெளியில் நடமாடத் தொடங்கினர். இருப்பினும் இன்று மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 9 நாட்களாக பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகள் ஊரடங்கின் கீழ் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 மாதங்களாக காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை மற்றும் கலவரங்களால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு மரணப் பள்ளத்தாக்காக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலையில் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் உள்ள பத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
Story first published: Sunday, August 8, 2010, 13:42 [IST]