கோவை அதிமுக கூட்டத்தை போல சேலம் திமுக கூட்டம்-வீரபாண்டியார்
சேலம்: கோவையில் நடந்த பிரமாண்டமான அதிமுக கூட்டத்தைப் போல சேலத்தில் நடக்கவுள்ள திமுக பொதுக் கூட்டம் பிரமாண்டமானதாக அமையும் என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
சேலம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் இன்று திமுக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வீரபாண்டி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், வரும் 20ம் தேதி சேலத்தில் தலைவர்தலைமையேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இது பொதுக்கூட்டமாக இருக்கக்கூடாது. மாநாடு போல் இருக்க வேண்டும்.
கோவை பொதுக்கூட்டம் போல் பன்மடங்கு பிரம்மாண்டமாக இது அமைய வேண்டும். இனி மற்ற மாவட்டங்களுக்கு சேலம் பொதுக்கூட்டம் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
பொதுக் கூட்டம் என்றுதான் தலைவரிடம் சொல்லியுள்ளோம். ஆனால் அவரே எதிர்பாராத வகையில், மாநாடு என்ற எதிர்பாராத பரிசை அனைவரும் வழங்க வேண்டும் என்று கூறினார் வீரபாண்டியார்.