கிருஷ்ணகிரியில் வெடிவிபத்து-வீடு இடிந்து தாய், 2 மகள்கள் படுகாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று காலை வெடி பொருட்கள் வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில் தாய் 2 மகள்கள் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி வாணக்கார தெருவை சேர்ந்த நூருல்லா (50) ஆந்திர மாநிலத்தில் குவாரிகளுக்கு ஜெலாட்டின் உள்ளிட்ட வெடிபொருள்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
இதற்காக இவர் தனது வீட்டிலயே வெடி பொருட்களை தயாரித்து கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை இவரது வீட்டி் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிகள் சிதறியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் நூருல்லாவின் மனைவி ரஜியா (45), மகள்கள் பிர்தோஸ் (22), சமீரா (20) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொது மக்கள் சேர்த்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தை டி.எஸ்.பி. லட்சுமணசாமி பார்வையிட்டார்.