நாவரசு கொடூரப் படுகொலை-இன்னும் முடியாத வழக்கு-இறுதி விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: தமிழகத்தை மட்டுமல்லாமல் நாட்டையே பதை பதைக்க வைத்த மாணவர் நாவரசு படுகொலை வழக்கு இன்னும் முடியவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான இறுதிக் கட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே.பொன்னுச்சாமி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பின்னர் பணியாற்றினார்.
இவரது ஒரே மகன்தான் நாவரசு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு நாவரசு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, தலை, கை,கால் என தனியாக பிரித்து சென்னையிலிருந்து பல இடங்களில் போட்டிருந்தனர். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3வது ஆண்டு படித்து வந்த ஜான் டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார். ராகிங்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தான் சொன்னதை நாவரசு கேட்காததால், அவரை கொடூரமாக கொலை செய்திருந்தார் ஜான் டேவிட்.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உடனடியாக இதை எதிர்த்து ஜான் டேவிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றச்ச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை, சாட்சிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குதான் இதுவரை முடிவுக்கு வராமல் தொடர்ந்து இழுபறியாக உள்ளது. இன்று இந்தமனு விசாரணைக்கு வந்தபோது, வாதாடுவதற்கு 2 நாள் அவகாசம் கேட்டா ஜான் டேவிட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.
இதையடுத்து விஜயதசமி விடுமுறைக்குப் பின்னர் வழக்கை ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.
-
13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications