69% இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு

வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து இந்த அமைப்பு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தது. இந் நிலையில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அனுமதித்து கடந்த ஜூலை 13ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து இந்த அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்த அமைப்பு தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தான், 69 சதவீத இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அது அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய முடியாது. ஆனாலும் தமிழக அரசின் 1993ம் ஆண்டு இடஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஒரு சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்று 2007ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் 1993ம் ஆண்டிலிருந்தே இந்த அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்து வந்தது. அதில் விடுக்கப்பட்ட கோரிக்கைப்படி தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் கூடுதலான இடங்களுக்கு சமமான இடங்கள் பொதுப் பட்டியலிலும் அதிகரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில்தான் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை ஆதாரங்களின் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு தெரிவிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு அளவை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ப மாநில அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி வாய் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications