For Daily Alerts
Just In
காஷ்மீருக்கு சுயாட்சி-பிரதமர் பேச்சுக்கு விளக்கம் கேட்கிறது பாஜக
இதுகுறித்து இன்று ராஜ்யசபாவல் பாஜக பிரச்சினை எழுப்பியது. காஷ்மீருக்கு சுயாட்சி என்ற சிந்தனையே காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற கோட்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்டது என்றும் பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், சுயாட்சி என்ற பெயரில் காஷ்மீருக்கு சுதந்திரம் அளிக்க முயலுகிறது காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த சுயாட்சியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இந்தியாவிலிருந்து காஷ்மீர் தனியாக செயல்படுவதை ஏற்க முடியாது. சுயாட்சி என்பது சரியானதுதானா என்பதை பிரதமர் யோசிக்க வேண்டும்.
சுயாட்சி என்ற வார்த்தைப் பிரயோகம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் பிரசாத்.
Comments
Story first published: Wednesday, August 11, 2010, 16:30 [IST]