காஷ்மீரில் வேலைவாய்ப்புகளை உருவாக்க நிபுணர் குழு: இன்போஸிஸ் நாராயணமூர்த்திக்கும் இடம்

இதில் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, சிஐஐ அமைப்பின் முன்னாள் தலைவர் தருண் தாஸ், காஷ்மீர் பிரிவு தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஷகீல் கலாந்தர் நந்தகுமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு சார்பில் ஒரு பிரதிநிதியும் குழுவில் இடம் பெறுவார்.
காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து 3 மாதங்களுக்குள் இந்தக் குழு தனது ஆய்வை முடித்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கும்.
நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்த பின்னர் இந்த நடவடிக்கையை பிரதமர் எடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் கூறுகையில், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து இந்தக் குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுக்கும்.
தங்களது ஆய்வின் ஒரு பகுதியாக தேசிய திறனாய்வு வளர்ச்சி அமைப்புடனும் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள்.
இந்தக் குழுவின் பரிந்துரை எதுவாக இருந்தாலும், இதை வெற்றிகரமாக அமல்படுத்துவது என்பது அனைத்து இளைஞர்களையும், வேலைவாய்ப்பு வளையத்திற்குள் ஈர்ப்பதில்தான் உள்ளது. அனைவருக்கும் நம்பிக்கையூட்ட வேண்டும். சரியான இலக்கைக் காட்ட வேண்டும். அவர்களுக்குரிய சந்தர்ப்பங்கள் சரியான முறையில் கிடைக்கச் செய்திட வேண்டும் என்றார் பிரதமர்.
பிரதமர் அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள அனைவருமே தொழில் துறையில் நிரம்பிய அனுபவம் பெற்றவர்கள். ஆனால், இவர்களால் ஜம்மு காஷ்மீர் மாநில பிரச்சினைக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பது தெரியவில்லை.
78 வயதான ரங்கராஜன் பொருளாதார நிபுணர் ஆவார். அதேபோல நாராயணமூர்த்தி தகவல் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்றவர். 71 வயதாகும் தருண் தாஸ், சிஐஐ அமைப்பின் குரலாக கிட்டத்தட்ட 46 ஆண்டு காலம் விளங்கியவர்.
சிஐஐ அமைப்பு இதுவரை இந்தியாவுக்கு பெரிய அளவில் எந்த நல்லதையும் செய்யவில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும், காஷ்மீர் பிரச்சனைக்கும் எந்த வகையில் பொருத்தம் இருக்கிறது என்பது தெரியவில்லை.
இவர்கள் காஷ்மீர் பிரச்சனையை முழுவதுமாக உள்வாங்கி, அந்த மாநில இளைஞர்களின் மன ஓட்டம், சிக்கல்கள், சவால்களை உணர்ந்து, அந்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, தொழில் அமைதி ஆகியவை குறித்து சரியாக ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க வேண்டும். அதை இவர்களால் செய்ய முடியுமா?.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications