கார் பரிசுஎன கூறி வரும் மெயில்களை நம்பாதீர்கள்-கமிஷனர் எச்சரிக்கை

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை புறநகர்களில் கடந்த சில தினங்களாக நடந்த சோதனையில் 54 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.39.5 லட்சம் மதிப்புள்ள 264 பவுன் தங்க நகைகளும், வெள்ளிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
சமீப நாட்களாக போலி இ-மெயில் மூலம் பல லட்சம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. பணத்துக்கு ஆசைப்பட்டு பலர் போலி இ-மெயில்களை நம்பி பணத்தை இழந்து விடுகின்றனர். இது தொடர்பான புகார்கள் அதிகமாக வருகின்றன.
வங்கிகளில் இருந்து அனுப்பியது போன்ற தோற்றத்துடன் தகவல்களை பெற்று விடுகிறார்கள். வங்கி கணக்கு எண், மற்றும் ரகசிய குறியீட்டு எண் பெற்று விடுகிறார்கள்.
இத்தகைய இ-மெயில்களுக்கு பொது மக்கள் பதில் கொடுக்க வேண்டாம். ரகசிய குறியீடு எண்ணை நீங்கள் கொடுத்தால் அதன் மூலம் உங்கள் பணம் அனைத்தையும் எடுத்து விடுவார்கள்.
உங்களுக்கு போலி இ- மெயில் வரும் என்று வங்கிகள் எச்சரிப்பது போல வரும் இ-மெயில்களையும் நம்ப வேண்டாம்.
இ-மெயில் உபயோகிப்பாளர்களில் இருந்து உங்களை தேர்வு செய்து இருப்பதாகவும் உங்களுக்கு கார் பரிசு விழுந்து இருப்பதாகவும், அதை இந்தியாவுக்கு அனுப்ப செலவுத் தொகை கேட்பார்கள். இப்படி வரும் மெயில்கள் நம்பாதீர்கள்.
வெளிநாட்டில் வேலை என்றும் பல லட்சம் ரூபாய் கிடைக் கும் எனவே விசாவுக்கு பணம் அனுப்புங்கள் என்ற கோரிக்கையுடன் வரும் இ-மெயில்களையும் நம்ப வேண்டாம்.
நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து, பணம் சம்பாதிக்கலாம். அதற்காக வங்கிகளில் கணக்கு தொடங்கி, அதன் எண்ணை தருமாறு கேட்டு மெயில்கள் வரலாம். 10 சதவீத கமிஷன் நீங்களே எடுத்துக் கொண்டு 90 சத வீதத்தை வெளி நாட்டுக்கு அனுப்பும் படி இ- மெயில்கள் வரும். இது மோசடிக்கு உடந்தையாக இருப்பது போன்ற குற்றமாகும். நீங்களும் கைதாக நேரிடும். எனவே இத்தகைய மெயில்களை நம்பி ஏமாறாதீர்கள்.
நைஜீரியன் கேம்ப் என்றழைக்கப்படும் போலி மெயில் கும்பலிடம் ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நூதனமாக மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவது இல்லை. இதில் பொதுமக்கள் தான் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications