For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரியானா தீவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம்

Google Oneindia Tamil News

Mariana Islands
சைபான் (குவாம்): அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் பிராந்தியத்தில் இன்று அதிகாலையில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பீதி ஏற்பட்டது.

குவாம் பிராந்தியத்திற்கு அருகே உள்ள மரியானா தீவில் இந்திய நேரப்படி இன்று காலை 7.19 மணியளவில் 7.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தப் பகுதி குவாமிலிருந்து 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படலாம் என்ற பெரும் பீதி ஏற்பட்டது. இதனால் மரியானா தீவு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர். அதேசமயம், நிலநடுக்கம் காரணமாக ஹவாய் முதல் பிலிப்பைன்ஸ் வரையிலான கடல் பகுதியில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி வரலாமோ என்ற பீதி ஏற்பட்டது. ஆனால் ஹவாய் தீவைத் தலைமையிடமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி அபாய எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை.

இருப்பினும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சிறிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X