இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை-ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை
நியூயார்க்: இலங்கை படைகள் மற்றும் அரசு புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பகம் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு இயக்குநர் ஜேம்ஸ் ராஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை புரிந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
ஈழத்தில் போர் முடிந்து 15 மாதங்களாகியும், போர்க்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு எதையும் செய்யவில்லை. இதை அமெரிக்க வெளியுறவு அமைச்சக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
சர்வதேச அளவிலான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும்.
தங்களது படையினரின் அத்துமீறல்கள், பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்து இலங்கை இதுவரை எந்த விசாரணையையும் நடத்தவில்லை என்று கூறியுள்ளார் ராஸ்.












Click it and Unblock the Notifications