For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகத்தில் மீன் பிடிக்கப் போன 3 தமிழக மீனவர்கள் கடலில் மூழ்கி பலி

Google Oneindia Tamil News

மங்களூர்: கர்நாடகத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற மூன்று தமிழக மீனவர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள்.

கர்நாடக மாநிலம் மங்களூர் கடல் பகுதியில் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கி, மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டுப் படகு மூலம் கடலுக்குச் சென்றுள்ளனர்.

மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கடல் சீற்றம் ஏற்பட்டு படகு சேதம் அடைந்துள்ளது. நடுக்கடலில் நிலை தடுமாறி விழுந்த மீனவர் ஒருவர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் மூழ்கிய 3 பேர் கரைக்கு வர முயன்றபோது 3 பேர் அலையால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். ஆனந்த் என்பவர் கடும் போராட்டத்துக்கு மத்தியில் நீந்திக் கரை சேர்ந்தார்.

கடலில் மூழ்கி இறந்த 3 பேரில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரின் உடல்களை தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X