திருப்பதி மலையில் ஜோடியை தேடி அலையும் பெண் சிறுத்தை: பிடிக்க கூண்டு
திருமலை: திருப்பதி மலையில் சமீபத்தில் பிடிபட்ட ஆண் சிறுத்தையின் ஜோடியான பெண் சிறுத்தையையும் பிடிக்க கூண்டு வைக்கப்படவுள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன் 2 சிறுமிகளை ஆண் சிறுத்தை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து அந்த புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
இந்த சிறுத்தையைத் தேடி அதன் ஜோடியான பெண் சிறுத்தை மலையெங்கும் திரிந்து கொண்டிருக்கிறது. தன் துணையைக் காணாததால் ஆவேசத்துடன் காணப்படுகிறது. நேற்று மாலை மலைப்பாதையில் மலை உச்சியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜி.என்.சி டோல்கேட் பகுதிக்கு பெண் சிறுத்தை வந்தது.
இதனைப் பார்த்த பக்தர்கள் பயந்துபோய் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தேவஸ்தானம் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பெண் சிறுத்தையின் காலடி தடத்தை பார்த்தனர்.
இதையடுத்து அதை கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய வனத்துறை ஊழியர்கள் மலைபாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications