வங்கியில் நகைகள் மாயம்: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் உறுதி

Subscribe to Oneindia Tamil

வள்ளியூர்: செட்டிகுளம் பாண்டியன் கிராம வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மாயமான சம்பவம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இவற்றை பத்திரமாக மீட்டுத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த வங்கி. இங்கு நடந்துள்ள இச்சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, பொதுமக்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நேற்று இரவு வங்கி அதிகாரிகள் செட்டிகுளம் மக்கள் மத்தியில் கூட்டம் நடத்தினர்.

செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் விஜயன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் வங்கியில் வரவு செலவு வைத்த 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வங்கி அதிகாரி பேசுகையில்,

வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளுக்கு வங்கி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்கும். எனவே, பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. பொதுமக்கள் நகைகளை இன்னும் ஒருவாரத்தில் திரும்ப கொடுக்கப்படும் என்றார்.

இதனால் பொதுமககள் நிம்மதி பெறுமூச்சு விட்டனர். இதற்கிடையே நகை மதி்ப்பீட்டாளர் ஜெயசகாயசீலனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தும்போது அவர் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்த பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+