பொன்னி அரிசி பெயரைப் பயன்படுத்த மலேசிய நிறுவனத்துக்கு தடை!

ஸ்யாரிகட் ஃபெய்சா என்ற மலேசிய நிறுவனம் 'பொன்னி' என்ற பெயரை 2006ல் பதிவு செய்து அரிசி விற்பனையில் ஈடுபட்டது. பொன்னி என்ற பெயருக்கான ட்ரேட்மார்க் தங்களுக்கு உரியது என்றும் அந்த நிறுவனம் சொந்தம் கொண்டாடியது.
இதை எதிர்த்து இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்திய விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் சிலர் கடந்த ஜனவரி 22-ல் மலேசிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தனது தீர்ப்பில் நீதிபதி அஸார் முகமது தெரிவித்துள்ளதாவது:
"பொன்னி என்பது தமிழகத்தில் காவிரியின் மற்றொரு பெயர். அந்தப் பகுதியில் விளையும் அரிசிக்கு பெயர்தான் பொன்னி. இதற்கான காப்புரிமை மற்றும் விற்பனை உரிமை தமிழகத்துக்கே உரி.து. அந்த வார்த்தையை மலேசிய நிறுவனம் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, மலேசிய வர்த்தக இலச்சினைகளுக்கான பதிவேட்டில் இருந்து பொன்னி என்பது நீக்கப்பட வேண்டும். நீக்கப்பட்ட செய்தி மலேசிய அரசிதழிலும் வெளியிடப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications