காஷ்மீரில் பெரும் கலவரம்-துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர்.
கடந்த ஜூன் 11ம் தேதி மூண்ட கலவரத்திற்கு சிறுவனையும் சேர்த்து 60 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மிலத் அகமத் தர் என்ற அந்த சிறுவன் அனந்தநாக் மாவட்டம், ஹர்னாக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த மோதலின்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தான். தனது வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களோடு நின்று கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிக் குண்டு பட்டு காயமடைந்தான். இன்று அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், இந்த சிறுவன் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாய்ந்து வந்த குண்டு பட்டு காயமடைந்து உயிரைப் பறி கொடுத்துள்ளான் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், எங்கிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வருகின்றன என்றே தெரியவி்ல்லை. இதன் காரணமாக அப்பாவிகளின் உயிர்கள்தான் தொடர்நது பறிபோய்க் கொண்டுள்ளன. இதுதான் காஷ்மீரிகளின் இன்றைய நிலை என்றார் சோகத்துடன்.
சிறுவனின் மரணச் செய்தி பரவியதும் தெற்கு காஷ்மீரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக கொய்மா, அனந்தநாக் நகர்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீநகரிலும், வடக்கு காஷ்மீரின் சோபூர் நகரிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரமுல்லா, ஹந்த்வாரா, குப்வாரா, புலவாமா பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு ரத்தக்களறியாகியுள்ளது. தொடர் கலவரம், போராட்டங்கள், ஊரடங்கால் பள்ளத்தாக்கே போர்க்களம் போல காணப்படுகிறது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications