காஷ்மீரில் பெரும் கலவரம்-துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர்.
கடந்த ஜூன் 11ம் தேதி மூண்ட கலவரத்திற்கு சிறுவனையும் சேர்த்து 60 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மிலத் அகமத் தர் என்ற அந்த சிறுவன் அனந்தநாக் மாவட்டம், ஹர்னாக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த மோதலின்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தான். தனது வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களோடு நின்று கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிக் குண்டு பட்டு காயமடைந்தான். இன்று அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், இந்த சிறுவன் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாய்ந்து வந்த குண்டு பட்டு காயமடைந்து உயிரைப் பறி கொடுத்துள்ளான் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், எங்கிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வருகின்றன என்றே தெரியவி்ல்லை. இதன் காரணமாக அப்பாவிகளின் உயிர்கள்தான் தொடர்நது பறிபோய்க் கொண்டுள்ளன. இதுதான் காஷ்மீரிகளின் இன்றைய நிலை என்றார் சோகத்துடன்.
சிறுவனின் மரணச் செய்தி பரவியதும் தெற்கு காஷ்மீரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக கொய்மா, அனந்தநாக் நகர்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீநகரிலும், வடக்கு காஷ்மீரின் சோபூர் நகரிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரமுல்லா, ஹந்த்வாரா, குப்வாரா, புலவாமா பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு ரத்தக்களறியாகியுள்ளது. தொடர் கலவரம், போராட்டங்கள், ஊரடங்கால் பள்ளத்தாக்கே போர்க்களம் போல காணப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications