கேரள அறுவடைத் திருநாள், ஓணம்...!
தமிழர்களுக்கு ஒரு பொங்கல், அது போல மலையாள மக்களுக்கு ஓணம். அறுவடைத் திருநாளான ஓணம் இதோ வந்து விட்டது.
மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்கம். அந்த மாதத்தில், திருவோண நட்சத்திரத்தின்போது வருவதுதான் ஓணம் பண்டிகை. இந்த தினத்தில் மன்னர் மகாபலி தங்களது நாட்டுக்கு மீண்டும் வருவதாக ஐதீகம். இதைத் தான் இந்த நாளில் மலையாள மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
பொங்கல் எப்படி நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறதோ, அதுபோல ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரளாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கலந்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.
பூக்கோலம் இட்டு, விருந்து வைத்து, படகுப் போட்டிகள் உள்ளிட்டவற்றை நடத்தி இந்த விழாவை தடபுடலாக கொண்டாடுவது வழக்கம்.
இது மலையாளிகளின் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்திலும் விமரிசையாக இது கொண்டாடப்படுகிறது, தமிழகத்தில் செட்டிலாகி விட்ட மலையாள மக்களால்.
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மினி கேரளா. இங்கு மலையாள மக்கள் அதிகம், அதேசமயம், தமிழர்களின் கலாச்சாரத்தை மலையாளிகளும், மலையாள மக்களின் பாரம்பரியப் பழக்கங்களை தமிழர்களும் ஏற்று பழகி வருகின்றனர்.
இங்கு ஓணம் எப்போதும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல கேரள எல்லையில் உள்ள கோவை மாவட்டத்திலும் பல பகுதிகளில் மலையாளிகள் கணிசமாக வாழ்கின்றனர். அங்கும் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படும்.
தமிழகத்தில் வந்து செட்டிலாகி விட்ட போதும் தங்களது கலாச்சாரம், பாரம்பரியத்தை மறக்காதவர்கள் மலையாளிகள். அதேசமயம் தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பான பண்டிககைளையும் கூட அவர்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடுவதும் உண்டு. அதே போல கேரளத்தில் வாழும் தமிழர்களும் ஓணத்தை அந்த மக்களோடு இணைந்து கொண்டுகின்றனர்.
ஒன் இந்தியாவின் மலையாளம் இணையத்தளத்தில் ஓணம் குறித்து பல தகவல்கள் நிறைந்துள்ளன.